Saturday, August 21, 2021

பித்தப்பை கற்கள்

 பித்தப்பை கற்கள்:-


மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.


சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.


பித்தநீர்ச் சுரப்பு


நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. 97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.


கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் (Gall bladder) பித்தப்பையினுள் அது செல்லும். அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.


நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், `பித்த நீர் தேவை’ என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது, தன்னைத்தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் குழாய்க்குள் அனுப்பிவைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.


பித்தநீர்க் கற்கள்


சாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன. ஏன்? பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும்.


இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.


காரணம் என்ன?


1. உடல் பருமன்


2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.


3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.


4. பரம்பரைக் கோளாறு.


5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.


6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.


7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.


8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.


9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.


10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.


11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.


12. அடிக்கடி விரதம் இருப்பது.


13. கர்ப்பம்.


14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.


15. ‘சிக்கில் செல்’ ரத்தசோகை.


வகைகள்


பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும். அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன. கடைசி வகைக்குக் கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே.


கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.


இங்குக் கற்களின் வகை குறித்துப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. குறிப்பிட்ட நபருக்கு எந்த வகை கல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அந்தக் கல்லுக்குரிய வேதிப்பொருட்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் பித்தப்பைக் கற்களை மீண்டும் வரவிடாமல் தடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள கற்களை, இன்னும் அதிகம் வளர விடாமலும் தடுத்துக்கொள்ள முடியும்.


அறிகுறிகள்


பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது அடுத்த வகை. மூன்றாவது வகையானது, வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும்.


முக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும். பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர். சில பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. 


இந்த பித்தப்பை கற்களை கரைக்க மிகச்சிறந்த மருந்து பிரண்டை உப்பு ஆகும்.

இரண்டு, மூன்று மாதத்தில் முற்றிலும் குணமாகும்.ஐந்து நாட்களிலேயே வலி,வேதனைகள் குறைந்து விடும்.

#தொடர்புகொள்ள வேண்டிய ஃபோன்.   நெம்பர் 7806803801.




Thursday, April 15, 2021

 கண்அழுத்த நோய்: குழுக்கோமா


கண் அழுத்த நோய் (ஆங்கிலம்:Glaucoma) எனப்படும் கண் அழுத்த நோயானது, பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். பல நேரங்களில். கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலேயே, இது விளைகிறது. ஆனால், வேறு பல காரணங்களினாலும், இந்நோய் கண்களில் உருவாகிறது..


கண் அழுத்த நோய்..

இந்நோயுள்ள கண்கள் வகைப்பாடு மற்றும் விபரக்குறிப்பு..


இது தனக்கே உரித்தான ஒரு குறிப்பிட்ட முறையில், விழித்திரையின் நரம்பு முடிச்சு அணுக்கள் இழப்பை ஈடுபடுத்துகிறது. கண்ணழுத்த நோயில், பல துணை வகைகள் உள்ளன. ஆனால், அவை யாவும் பார்வை நரம்பு இயக்கத்தடை என்பதன் வகைகளாகவே கருதலாம்..


அதிகரித்த உள்விழி அழுத்தம் (21 mmHg அல்லது 2.8 kPa இற்கு மேல்) கண் அழுத்த நோய் விளைவதற்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாகும். ஒப்புமையில், சற்றே குறைந்த அளவு அழுத்தத்திலேயே ஒருவருக்கு நரம்புச் சேதம் உருவாகலாம், மற்றொருவருக்கு வருடக் கணக்காக மிக அதிகமான விழி அழுத்தம் இருப்பினும் சேதம் ஒன்றும் விளையாதிருக்கலாம். சிகிச்சை பெறாத கண் அழுத்த நோய் நிரந்தரமாக பார்வை நரம்பு சேதத்தில் விளையக் கூடும். இதன் விளைவாக, பார்வைத் தள இழப்பு ஏற்பட்டு, நிரந்தரமான, பார்வையின்மையை உருவாக்குகிறது..


இந்த நோய் நிலைக்கேற்ப மருந்துகளை பதிவு செய்கிறேன் பாருங்கள்..


1).. சுருமாக்கல் ..

முஸ்லிம் சகோதரர்கள் கண்ணிமைகளில் தீட்டும் கல்..

இதை கண்ணிமைகளில் தீட்டவேண்டும்.. 


2) பேதி மருந்து.

அவசியம் வாரத்திற்கு ஒரு முறை என்று மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும்..


3).. பொன்னாங்கண்ணி தைலம்..

ஒரு டீஸ்பூன் அளவுக்கு உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டு வர வேண்டும்..


4).. பொன்நிமிளைச் செந்தூரம்..

ஒரு குன்றிமணி அளவுக்கு எடுத்து அதனுடன்.. பவளப் பற்பம்.. ஒரு குன்றிமணி அளவுக்கு சேர்த்து கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையுமாக சாப்பிட வேண்டும்..


5).. கறிவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு மென்று சாப்பிட்டு வரவேண்டும்..

பரிபூரணமாக குணமாகும்..