Thursday, July 14, 2022

சிறு நெருஞ்சி சூரணம்.


 சிறு நெருஞ்சி சூரணம் :-

 மூட்டுவலி,மூட்டு தேய்மானம், முழங்கால் மூட்டுகள் தேய்ந்து போன நிலை,முதுகு தண்டுவட சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், டிஸ்க் ப்ரொலாப்ஸ், கழுத்து திருப்ப இயலாத நிலை, கழுத்து வலி, கைகால் மரத்துப் போதல், cervical spondylitis, lumbar spondylitis இது போன்ற மேலும் பல நோய் நிலைகளை குணப்படுத்தும் ஆற்றல் இந்த சூரணத்திற்கு உள்ளது.

Wednesday, July 13, 2022

பித்தப்பை கல் கரைய எண்ணெய்

 பித்தப்பை கல் கரைய எண்ணெய் செய்முறை:-

விளக்கெண்ணெய் - 1லி

பூண்டுச் சாறு.  1/2 லி 

இந்துப்பு.       30 கிராம்

பெருங்காயம். 10 கிராம் 

இவற்றை எண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து இரவு உணவுக்கு பின் அரை டம்ளர் பாலில்,பத்து மில்லி அளவு கலந்து குடிக்கவும்.

இதனால் காலையில் இரண்டொரு முறை மலம் இலகுவாக வெளியேறும். அதிகமாக போனால் எண்ணெய்யை குறைத்தும்,சரியாக போகவில்லை எனில் மருந்தின் அளவை அதிகரித்தும் சாப்பிட வேண்டும்.

மேலும் இதனுடன் பிரண்டை உப்பும்,திராட்சாதி கசாய சூரணமும் சேர்த்து சாப்பிட்டு வர ஒரு மாதத்தில் பித்தப்பை கல் கரைந்து விடும்.




Sunday, April 17, 2022

சயாடிகா டிஸ்க் பல்ஜ் குணமாக

 தீராது என கைவிடப்பட்ட தண்டுவட மற்றும் ஃபைனல் கார்டு  நோய்கள், சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், கழுத்து எலும்பு தேய்மானம், முழங்கால் மூட்டு வீக்கம்,வலி இதனால் நிச்சயம் குணமாகும்.


🌷🌲💐👍#வாதகாஞ்சிரம் மாத்திரை செய்முறை🌷💐🌲👍


சிறப்பாக சுத்தி செய்த எட்டி விதை -500 கிராம்.

சுத்தி செய்த மிளகு-500 கிராம்.

சுத்தி செய்த சுக்கு-500 கிராம்.

சுத்தி செய்த கிராம்பு-500 கிராம்.

சுத்தி செய்த ஜாதிக்காய்-500 கிராம்.

சுத்தி செய்த ஜாதிபத்ரி -500 கிராம்.

             புரசம்  பிசின்      -500 கிராம்

சுத்தி செய்து கட்டிய ஜாதிலிங்க செந்தூரம் -300 கிராம்.

அயவீர செந்தூரம்-- 300 கிராம்


செய்முறை:-

    அனைத்து பொருள்களையும் இஞ்சி சாறு+எலுமிச்சை சாறு விட்டு மூன்று மணி நேரம் அரைத்து வில்லை ரவி உலர்த்திப் பொடித்து  ஜீரோ சைஸ் கேப்சூலில் அடைத்து வைக்கவும்.

இதனில் காலை ஒரு மாத்திரை, மதியம் ஒரு மாத்திரை உணவுக்கு பின் வெந்நீரில் சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் பலன்கள்,

          தீராது என கைவிடப்பட்ட தண்டுவட மற்றும் ஃபைனல் கார்டு  நோய்கள், சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், கழுத்து எலும்பு தேய்மானம், முழங்கால் மூட்டு வீக்கம்,வலி இதனால் நிச்சயம் குணமாகும்.

     அனைத்து மூட்டு வலிகளிலும் சிறந்த #வலிநிவாரணியாக பயன்படுகிறது. மேலும் மூட்டு தேய்மானம் போன்ற பல விதமான நோய்நிலைகளை குணப்படுத்துகிறது.


சைனஸ் எனும் பீனிச நோயில் நன்கு வேலை செய்து விரைவில் நோயை குணப்படுத்துகிறது.


கைநடுக்கம்,கால்நடுக்கம், தலை நடுக்கம் குணமாக உதவுகிறது.


நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, எலும்பு தேய்மானம், மூட்டுவலி , தோள்பட்டை வலி,  இடுப்பு வலி, ஆண்மையிழப்பு, நரம்பு பலவீனம், சைனஸ்,போன்ற நோய்கள் குணம் பெறுகின்றன.


சயாடிக்கா என்றால் என்ன?


            நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.

அறிகுறிகள்:-

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

அதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.